Tuesday, December 18, 2012

ஆடு புலி ஆட்ட‌ம்

 
க‌ரைக‌ள‌ற்ற‌ ந‌திப்ப‌டுகைக்கு அடித்து வ‌ர‌ப்ப‌ட்டான் ஒருவ‌ன். வ‌ண்ண‌ங்க‌ள‌ற்ற‌
வான‌வில் காண்பிப்ப‌தாய் சொல்லி பிர‌ச‌ங்க‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்தான்... எங்கிருந்தோ ப‌ற‌ந்து வந்த‌ ராட்ச‌ச‌க் க‌ழுகொன்று த‌ன் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளால்
கிழித்துக் க‌வ்வியிருந்த‌ ர‌த்த‌ம் தோய்ந்த‌ வெள்ளாட்டுக் குட்டியைத் துற‌வியின் குடில் வாச‌லில் வீசி விட்டுப் ப‌ற‌ந்த‌து. விடியும்முன் வாச‌லுக்கு வ‌ந்த துற‌வியின் சேவ‌கி வெள்ளாட்டுக்குட்டி க‌ண்டு வீறிட்டாள்... நித்திரை க‌லைந்து பாத‌ர‌ட்சையின்றி வெளியே வ‌ந்த‌வ‌ன், ஆட்டுக்குட்டியையும் அல‌றி விழுந்திருந்த‌ அழ‌கு சேவ‌கியையும் அள்ளியெடுத்துக்கொண்டு குடிலுக்குள் நுழைந்தான். இன்றைய‌ அருளுரையில் குரு சொன்ன‌ வெள்ளாட்டுக்குட்டிக் க‌தையை ப‌ய‌ப‌க்தியுட‌ன் செவிம‌டுத்துக்கொண்டிருந்த‌ன‌ர், ஆற்றில் அடித்து வ‌ர‌ப்ப‌டாத‌ சீட‌ர்க‌ளும்...  ச‌ர‌ணாக‌தி ஜ‌ன‌ங்க‌ளும்... அருகில் அம‌ர்ந்திருந்தாள்
ர‌த்த‌ம் தோய்ந்த‌ நினைவுக‌ளுட‌ன்... சேவ‌கி !
                                                 
                                                                                                                நெப்போலிய‌ன்

No comments: